ஆர்.காம், ஏர்செல் இணைப்பு காலம் தள்ளிவைப்பு

ஆர்.காம், ஏர்செல் இணைப்பு காலம் தள்ளிவைப்பு
Updated on
1 min read

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ஏர்செல் நிறுவனங்கள் இணைவதற்காக ஒப்பந்தம் போடப்பட்டன. இந்த ஒப்பந்த காலத்தை மேலும் ஒரு மாதத்துக்கு இரு நிறுவனங்கள் நீட்டித்தன.

இந்த இரு நிறுவனங்களும் கடந்த வருடம் டிசம்பர் 22-ம் தேதி இணைவதற்கான 90 நாட்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதன் பிறகு கடந்த மார்ச் மாதம் இந்த மேலும் 60 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இன்றுடன் இந்த ஒப்பந்த தேதி முடிவுறுவதை அடுத்து மேலும் 30 நாட்களுக்கு அதாவது ஜூன் 22-வரை நீட்டிக்கப்பட்டுள் ளது. இந்த இரு நிறுவனங்களும் இணையும் பட்சத்தில் இந்திய டெலிகாம் சந்தையில் 19.3 சதவீத ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை வைத்திருக்கும். அதேபோல ரிலை யன்ஸ் நிறுவனம் சிஸ்டமா நிறு வனத்தை கையகப்படுத்தும் நட வடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in