Published : 05 Apr 2016 08:30 AM
Last Updated : 05 Apr 2016 08:30 AM

விஜய் மல்லையா தர முன்வந்த ரூ.4,000 கோடியை வங்கிகள் நிராகரிக்க முடிவு?

விஜய் மல்லையா திருப்பி அளிப்பதாக உத்தரவாதம் அளித்த ரூ.4,000 கோடியை வங்கிகள் நிராகரிக்க திட்டமிட்டுள்ளன. கிங்பிஷர் நிறுவனத்துக்காக வாங்கிய கடனில் முதல் கட்டமாக ரூ.4,000 கோடியை திருப்பி அளிப்பதாக விஜய் மல்லையா கடந்த வாரம் உச்ச நீதிமன்றத் தில் தனது வழக்கறிஞர் மூலம் தெரிவித்திருந்தார். இது குறித்து ஏப்ரல் 7 ம் தேதிக்குள் வங்கிகள் பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் விஜய் மல்லையாவின் கோரிக்கையை நிராகரிக்க உள்ள வங்கிகள், அதற்கு பதிலாக இரண்டு மடங்கு தொகையை கோர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விஜய் மல்லையாவின் கோரிக்கை குறித்து கடன் அளித்துள்ள 17 வங்கிகளும் கடந்த சனிக்கிழமை ஆலோசனை செய்து இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. செப்டம்பர் மாதத்துக்குள் ரூ.4,000 கோடியை அளிப்பதாக உத்தரவாதம் அளித்த மல்லையா, உடனடியாக ரூ.2,000 கோடியை அளிப்பதாக வழக்கறிஞர் மூலம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த சீலிட்ட கடிதம் மூலம் தெரிவித்திருந்தார். இதற்கு வருகிற 7-ம் தேதி வங்கிகள் பதில் அளிக்க உள்ளன.

பணமாக வசூலிக்க வேண்டும்

கடன் கொடுத்துள்ள 17 வங்கி களும் சனிக்கிழமை மேற்கொண்ட ஆலோசனை கூட்டத்தின் முடிவுபடி, விஜய் மல்லையாவிடமிருந்து கடன் அசல் தொகையில் முதற்கட்டமாக உடனடியாக ரூ.4,900 கோடி கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கடுத்து அடுத்த கட்டமாக கடனுக்கான வட்டியை வசூலிப் பது குறித்து பேசலாம் என முடி வெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு அதிகாரி பேசிய போது இந்த தொகை உடனடியாக பணமாக வேண்டும், ரெக்கவரி ஏஜெண்டுகள் மூலமாக வசூலிக் கும் நடவடிக்கைகள் வேண்டாம் என்றும் கேட்கப்படும் என்று குறிப்பிட்டார். மேலும் விஜய் மல்லையா நீதிமன்றத்துக்கு அளித்துள்ள இந்த எழுத்து மூலமான அறிக்கையில் சந்தேகங்கள் உள்ளது என்று குறிப்பிட்ட அந்த அதிகாரி, எந்த சொத்திலிருந்து அதை அளிக்க உள்ளார் என்பது குறித்து சந்தேகம் உள்ளது என்றார்.

கிங்பிஷர் லோகோ விற்பனை

வங்கிகள் விஜய் மல்லையா விடமிருந்து கடனை வசூலிக்க பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகின்றன. மல்லையாவின் கடனுக்காக மும்பையில் உள்ள கிங்பிஷர் அலுவலகத்தை கையகப் படுத்தி ஏலம் விடும் முயற்சி தோல்வியடைந்தது. கிங்பிஷர் நிறுவனத்தின் முக்கிய சொத்தான கிங்பிஷர் லோகோவை விற்பனை செய்ய சமீபத்தில் முடிவு செய்யப் பட்டுள்ளது. இதன் அடிப்படை விலையாக ரூ.366.7 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இவ்விதம் லோகோ மட்டும் விற்பனை செய்யப்பட்டால் தற்போது யுனைடெட் பிரூவரீஸ் நிறுவனத்தில் தனது பங்கை 40 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ள ஹெனிகன் நிறுவனத்துக்கு சிக்கலாகிவிடும். தற்போது கிங்பிஷர் நிறுவன தயாரிப் புகளான பீர் பாட்டில் மற்றும் கேன்களில் இந்த லோகோ தான் பிரதானமாக இடம்பெற் றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x