Published : 25 Apr 2016 09:45 AM
Last Updated : 25 Apr 2016 09:45 AM
அமெரிக்காவில் நடக்கும் இன் னொடிரெக் என்னும் நிகழ்ச்சியில் தொழில்நுட்ப தொழில் முனைவோர்களும் முதலீட்டாளர் களும் கலந்து உரையாட வாய்ப்பு கிடைக்கும். மூன்றாவது வருடமாக இந்த நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள் வதற்காக 39 ஸ்டார்ட் அப் நிறுவ னங்களை ஐடி துறை அமைப்பான நாஸ்காம் தேர்ந்தெடுத்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சர்வதேச முதலீட்டாளர்களிடம் நேரடியாக உரையாட, ஆலோசனை கேட்க, நிறுவனத்தை விரிவாக்கம் செய்வது குறித்து ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நேரடியாக உரையாட முடியும். இந்த நிகழ்ச்சி மே 2-ம் தேதி முதல் மே 7-ம் தேதி வரை நடக்க இருக்கிறது. ஸ்டார்ட் அப் நிறுவனங் களுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பு என்று நாஸ்காம் 10,000 ஸ்டார்ட் அப்ஸ் பிரிவின் மூத்த இயக்குநர் ரஜத் டான்டன் தெரிவித்தார்.
ஹெல்த்கேர், கேம்ஸ், நிதிச் சேவை என பல துறைசார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளன. முதல் வரு டத்தில் 25 ஸ்டார்ட் அப் நிறுவனங் களும், இரண்டாவது வருடத்தில் 34 நிறுவனங்களும் இப்போது 39 நிறுவனங்களும் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT