Published : 02 Apr 2022 08:47 AM
Last Updated : 02 Apr 2022 08:47 AM

அன்றாடம் அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை: இன்றைய நிலவரம் என்ன?

புதுடெல்லி: சர்வதேச சந்தையில் பிரன்ட் கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 104 டாலர் அளவுக்குக் குறைந்தும் கூட இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை. கடந்த 12 நாட்களில் 10 நாட்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் எண்ணெய் விலை 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றம் செய்யப்படுகிறது.
ஆனால், 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர் கடந்த நவம்பர் 2021க்குப் பின்னர் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் காணாமல் இருந்தது. சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் கடந்த அக்டோபருக்குப் பின்னர் ஏற்றமில்லாமல் இருந்தது. வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை மட்டுமே ஏற்றம் கண்டது.

கடந்த 2021 நவம்பர் 4 ஆம் தேதிக்குப் பின்னர் முதன்முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது மார்ச் 22 ஆம் தேதி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏற்றப்பட்டது. 137 நாட்களுக்குப் பின்னர் விலையேற்றம் செய்யப்பட்ட நிலையில் அன்றிலிருந்து இன்று வரை 10 முறை விலை உயர்ந்துவிட்டது. இதன் நீட்சியாக அத்தியாவசியப் பொருட்களில் நிலையும் உயர்ந்துள்ளது. இதனால் சாமான்ய மக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றனர்.

கடந்த 12 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு சராசரியாக ரூ.7.20 வரை அதிகரித்துள்ளது.

ஏப்ரல் 2 விலை விவரம்:

நகரங்கள் பெட்ரோல் (ரூபாய்) டீசல் (ரூபாய்)
டெல்லி 102.61 93.87
மும்பை 117.57 101.79
கொல்கத்தா 112.09 97.02
சென்னை 108.21 98.21

இந்தியா வருகிறது ரஷ்ய எண்ணெய்: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவும் ஆயத்தம் ஆகி வருகிறது. முதல்கட்டமாக 30 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் வாங்க இந்தியன் ஆயில் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவுக்கு முதல் தரமான கச்சா எண்ணெயில் பீப்பாய் ஒன்றுக்கு 35 டாலர்கள் தள்ளுபடி விலையில் வழங்க ரஷ்யா முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுமட்டுமின்றி டாலர்கள் இல்லாமல் ரூபிள்- ரூபாயில் பரிவர்த்தனை செய்யவும் ரஷ்யா தயாராக உள்ளது. இந்த ஆண்டுக்கான ஒப்பந்தம் செய்யப்படுவதன்படி 15 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்க வேண்டும். ஆசியாவின் நம்பர் 2 கச்சா எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியா இதன் மூலம் பெருமளவு பயனடைய வாய்ப்புள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x