Published : 03 Mar 2022 08:01 AM
Last Updated : 03 Mar 2022 08:01 AM

எல்ஐசியின் 31.62 கோடி பங்குகளை விற்க திட்டம்

சென்னை

எல்ஐசி நிறுவனத்தின் பொதுமேலாளர் மினி ஐப் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

புதிய வணிக பிரீமியம் வர்த்தகத்தில் எல்ஐசி நிறுவனம் தொடர்ந்து சந்தையில் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்நிலையில், பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட உள்ளது. ஒவ்வொரு பங்கும் ரூ.10 முகமதிப்பு கொண்டிருக்கும். மொத்தம் 31.62 கோடி பங்குகள் விற்பனை செய்யப்படும். இதில் ஊழியர்களுக்கு 5 சதவீதமும், தனிநபர் காப்பீடுதாரர்களுக்கு 10 சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்படும்.

பங்கு வெளியீட்டில் 50 சதவீதம் நிறுவன முதலீட்டாளர்களுக்கும், 15 சதவீதம் நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்கும் ஒதுக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x