Last Updated : 12 Apr, 2016 09:19 AM

 

Published : 12 Apr 2016 09:19 AM
Last Updated : 12 Apr 2016 09:19 AM

ஆதார், நெட் பேங்கிங் அடிப்படையில் இணையதளம் மூலம் கோரிக்கை தாக்கல்: வருமான வரித்துறையில் புதிய வசதி அறிமுகம்

ஆதார் மற்றும் வங்கிகளின் இணையதள பரிவர்த்தனை (நெட் பேங்கிங்) அடிப்படையிலான வரி தாக்கல் (இ-ஃபைலிங்) கோரிக்கை வசதியை வருமான வரித்துறை உருவாக்கியுள்ளது. வருமான வரித் தொகை திரும்பப் பெறுவதற்காக ஆன்லைன் மூலம் தாக்கல் செய்யப்படும் ஐடிஆர் விண்ணப்ப முறை போன்று இந்த முறை உருவாக்கப்பட்டுள் ளது.

வரி அதிகாரியிடம் தாக்கல் செய்ய வேண்டிய கோரிக்கை விவரங்களை முன்கூட்டியே தாக்கல் செய்ய இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வருமான வரித்துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் இத்தகைய வசதி முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இ-ஃபைலிங் வெரிபிகேஷன் சிஸ்டம் எனப்படும் இவிசி முறையில் ஒரே ஒரு கோரிக்கை படிவத்தை மட்டுமே ஒருவர் பூர்த்தி செய்து அனுப்பலாம். அது எந்த நிதி ஆண்டுக்காக இருந்தாலும் பரவாயில்லை. வருமான வரி தாக்கல் செய்வோரின் நிரந்த கணக்கு எண் (பான்) மற்றும் பிற அடையாள ஆதாரங்கள் மூலம் அவரைப் பற்றிய விவரத்தை தேடிக் கண்டுபிடிக்கும்.

ஒரு இவிசி 72 மணி நேரம் அதாவது 3 நாள்கள் மட்டுமே காலக்கெடு கொண்டது.

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய சங்கேத வார்த்தை (ஓடிபி) இந்த இவிசி-க்கு அளிக்கப்படும். இது ஆதார் எண் மற்றும் வங்கிகளில் அளிக்கப் பட்ட விவரங்கள் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபரின் இணையதள முகவரி மற்றும் அவர் அளித் துள்ள மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் ஆக அனுப்பப் படும்.

அதையடுத்து சம்பந்தப்பட்ட வர்கள் இ-மெயில் மூலம் வரி தாக்கல் கோரிக்கை படிவத்தை பூர்த்தி செய்யலாம்.

வருமான வரித்துறையின் இணையதள முகவரி >http://incometaxindiaefiling.gov.in- சென்று மின்னணு முறையில் கையெழுத்திட முடியும். இரண்டு பக்கங்களைக் கொண்ட இந்த படிவம் தற்போது படிவம்-35 என்று குறிப்பிடப்படுகிறது. இந்த படிவம் சமீபத்தில்தான் துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த படிவத்தில் வரி செலுத்து வோர் எத்தகைய கோரிக்கையை வருமான வரித்துறை மதிப்பீட்டு அதிகாரியிடம் எதிர்நோக்கியுள் ளார் என்பதை 1,000 வார்த்தை களில் தெரிவிக்கலாம். தனது நோக்கத்தை 100 வார்த்தைகளில் வெளிப்படுத்தவும் வசதி அளிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் ஆவணங்களையும் இந்த படிவத்துடன் இணைத்து அனுப்பும் வசதியும் உள்ளது.

கோரிக்கை விசாரிப்பை வரு மான வரித்துறை நான்கு கட்டங் களாக மேற்கொள்கிறது.

இந்த கோரிக்கை மனு தாக்கல் வசதியால் வரி செலுத்துவோருக்கு நேரம், அலைச்சல் மிச்சமாகும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x