Published : 25 Apr 2016 09:43 AM
Last Updated : 25 Apr 2016 09:43 AM
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறது. 6 வருட இடைவெளிக்குப் பிறகு ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கான முடிவை எடுத்துள்ளது. அதே சமயத்தில் நீண்ட கால நிலையான அளவு கொண்ட ஒப்பந்தம் செய்து கொள்ள ரிலையன்ஸ் திட்டமிட்டு வருகிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் உலகத்திலேயே பெரிய சுத்திகரிப்பு ஆலையை குஜராத் மாநிலம் ஜாம்நகரில் செயல்படுத்தி வருகிறது. ஆரம்ப காலகட்டத்தில் வருடத்திற்கு 5 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை வாங்கி வந்தது.
ஈரான் மீதான பொருளாதார தடை நீங்கியுள்ளதால் ஈரானுடன் உள்ள உறவை மறு உருவாக்கம் செய்வதாக ரிலையன்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.
ஈரானின் அனுசக்தி திட்டம் குறித்து சர்வதேச அளவில் ஈரானுக்கு அழுத்தம் ஏற்பட்டதை அடுத்து ரிலையன்ஸ் நிறுவனம் பெட்ரோலிய பொருட்களை ஏற்றுமதி செய்வதை 2009-ம் ஆண்டிலிருந்து நிறுத்திக் கொண்டது. 2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து மேற்கு ஆசிய நாடுகளிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதையும் நிறுத்திக் கொண்டது.
இதனால் ரிலையன்ஸ் இண் டஸ்ட்ரீஸ் நிறுவனம் அமெரிக்கா வின் ஷேல் எரிவாயு திட்டங்களில் முதலீடு செய்தது. ஈரான் மீது தடை இருந்ததால் ஈரான் நாட்டு டன் தொழில் செய்வதற்கு தயங்கி வந்தது. இந்த வருடம் ஜனவரி மாதம் ஈரான் மீதான தடை நீக்கப்பட்டதால் மறுபடி ஒப்பந் தம் செய்து கொள்ள ரிலையன்ஸ் நிறுவனம் முன்வந்தது.
ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை தலைமை நிதி அதிகாரி வி.காந்த் கடந்த வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது குறிப்பிட்ட காலத்திற் குள்ளோ அல்லது வருடத்திற்கோ நிலையான அளவு ஒப்பந்தத்தை ஈரானுடன் செய்துகொள்ள பேசி வருகிறோம் என்று தெரிவித்தார்.
மங்களூர் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் நிறுவனம் மற்றும் எஸ்ஸார் எண்ணெய் நிறுவனம் ஆகிய இந்திய நிறுவனங்கள் ஈரானின் முதன்மை வாடிக்கையாளர்களாக உள்ளன. 63 சதவீத எண்ணெய் பொருட்கள் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து உருவாக்கப்படுகின்றன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தற்போது மத்திய கிழக்கு, அமெரிக்கா, கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு பெட்ரோலை ஏற்றுமதி செய்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT