Published : 24 Feb 2022 04:22 PM
Last Updated : 24 Feb 2022 04:22 PM

எகிறும் தங்கம் விலை: 4 மணிநேரத்தில் கிராமுக்கு ரூ.376 உயர்வு

சென்னை: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடங்கியுள்ள நிலையில் இது எதிரொலியாக தங்கம் விலை இன்று கடுமையாக உயர்ந்துள்ளது.

உக்ரைன் மீதுரஷ்யா இன்று தாக்குதல் தொடங்கியுள்ளது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.

உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி தங்கத்தில் தங்கள் முதலீடுகளை மாற்றி வருகின்றனர். இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி கிராமுக்கு ரூ.108 உயர்ந்து ரூ.4827- க்கு விற்பனையானது. பவுனுக்கு ரூ.864 உயர்ந்து ரூ. 38616-க்கு விற்பனையானது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ. 41544-க்கு விற்பனையானது.

இந்தநிலை இன்று பிற்பகல் நிலவரப்படி தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. காலை நேரத்தை ஒப்பிட்டால் மாலை நேர நிலவரப்படி கிராமுக்கு ரூ.47 அதிகரித்துள்ளது. கிராம் ரூ.4874 ஆக விற்பனையாகி வருகிறது.

காலை நிலவரத்தை ஒப்பிட்டால் 4 மணிநேரத்தில் பவுனுக்கு ரூ.376 உயர்ந்து ரூ. 38992-ஆக மாலையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ. 41920-க்கு விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளியின் விலை ரூ.2.70 உயர்ந்து ரூ.71.40-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ. 71,400 ஆக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x