ஐபிஓ-க்கு தயாராகும் எல்ஐசி: பங்கு விற்பனை தொடர்பான வரைவு அறிக்கை தாக்கல்

ஐபிஓ-க்கு தயாராகும் எல்ஐசி: பங்கு விற்பனை தொடர்பான வரைவு அறிக்கை தாக்கல்
Updated on
1 min read

புதுடெல்லி: எல்ஐசி விரைவில் பொதுப்பங்கு வெளியீடு (ஐபிஓ) மேற்கொள்ள உள்ளது. அதற்கான ஆயத்தப்பணிகள் தீவிரமாக மேற்கொள் ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நேற்று பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபியிடம் பங்குகள் விற்பனை தொடர்பான வரைவு அறிக்கையை (டிஆர்ஹெச்பி) எல்ஐசி தாக்கல் செய்துள்ளது.

பொதுப் பங்கு வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும் மார்ச் 31-ம் தேதிக்குள் ஐபிஓ மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எல்ஐசியில் 5% பங்குகளை விற்று ரூ.78,000 கோடி நிதி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. மொத்தம் 31.6 கோடி பங்குகள் விற்கப்படும் எனத் தெரிகிறது.

இதில் 50% நிறுவன முதலீட் டாளர்களுக்கும், 35% சில்லறை முதலீட்டாளர்களுக்கும் 10% எல்ஐசி பாலிசிதாரர்களுக்கும் ஒதுக்கப்பட இருப்பதாகவும், 5%தள்ளுபடி வழங்கப்பட இருப் பதாகவும் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in