

புதுடெல்லி: கச்சா பாமாயில் மீதான இறக்குமதி வரி இப்போது 8.25% ஆக உள்ளது. இதை 5.5% ஆக மத்திய அரசு குறைத்துள்ளது. நேற்று முன்தினம் முதல் இது அமலுக்கு வந்துள்ளது.
இந்த வரி குறைப்பு செப்.30 வரை அமலில் இருக்கும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால்சமையல் எண்ணெய் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு உள்நாட்டில் சமையல் எண்ணெய் விலை அதிகமாக இருந்தது. இதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்தியஅரசு பாமாயில் மீதான இறக்குமதி வரியை அவ்வப்போது குறைத்தது. அந்த வகையில் இப்போது மேலும் குறைக்கப்பட்டுள்ளது.
இதேபோல சூரிய காந்தி எண்ணெய் மற்றும் சோயாபீன் எண்ணெய் மீதான இறக்குமதி வரி செப். 30-ம் தேதி வரை 5.5% ஆகஇருக்கும் என அறிவிக்கப்பட் டுள்ளது. இந்த அறிவிப்பை சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் வரவேற்றுள்ளன.