Last Updated : 11 Mar, 2016 10:23 AM

 

Published : 11 Mar 2016 10:23 AM
Last Updated : 11 Mar 2016 10:23 AM

சென்செக்ஸ் 171 புள்ளிகள் சரிவு

தொடர்ந்து 6 நாட்களாக ஏற்றத் தை கண்டுவந்த இந்திய பங்குச் சந்தைகள் நேற்று சரிவை சந்தித் தன. சென்செக்ஸ் 171 புள்ளிகள் சரிந்தது. பட்ஜெட்டுக்கு பிறகு ஏற்றத்தை கண்டு வந்த பங்குச் சந்தை, சர்வதேச பொருளாதாரம் மந்தமாக இருப்பதால் சரிவை கண்டுள்ளது என்று சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர். ஜனவரி மாதத்திற்குரிய தொழில் உற்பத்திக் குறியீடு இன்று வெளியாக இருப்பதால் முதலீட் டாளர்கள் நேற்று எச்சரிக்கையாக இருந்துள்ளனர்.

மும்பை பங்குச் சந்தையில் நேற்றைய வர்த்தக முடிவில் முக்கியகுறியீடான சென்செக்ஸ் 171 புள்ளிகள் சரிந்து 24623 புள்ளி யிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிப்டி 45 புள்ளிகள் சரிந்து 7486 புள்ளியிலும் முடிந்தன.

ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ், எல் அண்ட் டி நிறுவனப் பங்குகள் 3 சதவீதம் சரிவை சந்தித்துள்ளன. ஹிண்டால்கோ, ஹெச்டிஎப்சி, மாருதி சுஸூகி நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டன. பிஹெச்இஎல் நிறுவனத்துக்கு கிரைசில் அமைப்பு தரப்புள்ளிகள் குறைத்துள்ளதால் அதன் பங்கு மதிப்பு 3 சதவீதம் சரிவைக் கண்டது.

2011க்கு பிறகு இந்த மாதம் 4-ம் தேதி மிகப்பெரிய அளவில் பங்குச்சந்தை ஏற்றத்தை சந்தித்தது.தொடர்ந்து ஆசிய பங்குச் சந்தைகள் ஏற்றத்தைக் கண்டுவரும் நிலையில் இந்திய பங்குச்சந்தை நேற்று சரிவைக் கண்டுள்ளது.

உற்பத்தியை அதிகரிக்க ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் அனுமதிகொள்கைக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் தேசிய பங்குச் சந்தையில் எண்ணெய் மற்றும் வாயுகுறியீடு 1.05 சதவீதம் சரிந்தது.

உலோக பங்குகள் உயர்வு

மத்திய அமைச்சரவை சுரங்கம் மற்றும் கனிம வளர்ச்சி மற்றும் ஒழுங்கு முறை சட்டத் திருத்த மசோதாவுக்கு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இதன் காரணமாக உலோக நிறுவனங்களின் பங்கு கள் உயர்ந்தன.

ஜிண்டால் ஸ்டீல், செயில், வேதாந்தா, ஹிண்டால்கோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 0.28 சதவீதம் முதல் 2.9 சதவீதம் வரை உயர்ந்து முடிந்தன.

மத்திய அரசு ஏர் டர்பைன் எரிவாயு விலையை குறைத்ததை அடுத்து விமான போக்குவரத்து நிறுவன பங்குகள் உயர்ந்தன. ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஸ்பைஸ் ஜெட் நிறுவன பங்குகள் முறையே 0.71 சதவீதம் மற்றும் 0.39 சதவீதம் உயர்ந்து முடிந்தன.

மத்திய அரசு பட்ஜெட்டில் அடுத்த நிதியாண்டிற்கான நிதி பற்றாக்குறை இலக்கு குறைத்ததால் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்கும் என முதலீட்டாளர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x