Last Updated : 01 Mar, 2016 09:06 AM

 

Published : 01 Mar 2016 09:06 AM
Last Updated : 01 Mar 2016 09:06 AM

ஒரு ரூபாயில் 21 காசு கடன் மூலம் திரட்டப்படுகிறது

அரசுக்கு கிடைக்கும் ஒரு ரூபாயில் 21 காசுகள் கடன் மூலம் பெறப்படுகிறது. 2016-17-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் இது தெரிவிக்கப் பட்டுள்ளது. 19 காசுகள் வட்டி செலுத்துவதற்கு செலவிடப்படுகிறது. வெளிச் சந்தை கடன் மூலம் இது பெறப்படுகிறது என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

63 காசுகள் நேரடி மற்றும் மறைமுக வரி மூலம் பெறப் படுவதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்கையில் குறிப்பிட்டார்.

அரசின் செலவினங்களில் மாநிலங்களுக்கு ஒதுக்கும் வரி வருமானமாக ஒதுக்கும் பங்காகும். இந்த வகையில் 23 காசுகள் மாநில அரசுகளுக்கு அளிக்கப்படுகின்றன. அரசின் மிகப் பெரிய வருவாய் ஆதார மாக விளங்கும் கார்ப்பரேட் வரி தற்போது ஒரு ரூபாயில் 19 காசுகளாகக் குறைந்துள்ளது.

இதேபோல சேவை வரி மூலம் திரட்டப்படும் வருமானம் எவ்வித மாற்றமும் இன்றி 9 காசுகளாக நீடிக்கிறது. வருமான வரி வருமானமும் மாற்றம் இன்றி 14 காசுகளாக தொடர்கிறது. மறைமுகமான வரி வருமானத்தில் அரசுக்குக் கிடைக்கும் வருமானம் 21 காசுகளாகும். சுங்க வரி மூலமான வருமானம் 21 காசுகளாக உயர்ந்துள்ளது.

வரி இல்லாத பிற இனங் கள் மூலமான வருமானம் 13 காசுகளாகும். இது பொதுத் துறை பங்கு விலக்கல் நடவடிக்கை மூலமும், 3 காசுகள் கடன் அல்லாத பிற முதலீடுகள் மூலமாகவும் அரசு திரட்ட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x