Published : 24 Jun 2014 11:50 AM
Last Updated : 24 Jun 2014 11:50 AM

ஜூன் 26-ல் சிறு, குறுந்தொழில்துறை மாநாடு

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினரின் ஒரு நாள் மாநாடு குவாஹாட்டியில் இம்மாதம் 26-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இத்துறையினர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.

சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்கள் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள், வளர்ச்சிக்கான எதிர்காலத் திட்டம், சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்மேம்பாட்டு சட்டம் 2006-ஐ அமல்படுத்துவது மற்றும் இத்துறைக்கு முன்னுரிமை கடன் அளிப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என்று வடகிழக்கு பிராந்தியத்துக்கான தொழில்சங்க தலைவர் எ.ஆர். காம்பெட் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x