Published : 12 Mar 2016 10:11 AM
Last Updated : 12 Mar 2016 10:11 AM
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் (இபிஎஃப்ஓ) சேர ஒரு நிறுவனத்தில் குறைந்தபட்சம் 20 தொழிலாளர்கள் இருக்கவேண்டும் என்பதை 10 தொழிலாளராக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கான முன்வரைவு தொழிலாளர் அமைச்சகத்திடம் தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
20 தொழிலாளர்கள் என்பதை 10 தொழிலாளர்களாக குறைத்தால் பிஎஃப் நிதி 20 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
``தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் நிறுவனம் இணைவதற்கு தொழிலாளர் எண் ணிக்கையை 10ஆக குறைக்கும் முன்வரைவை தொழிலாளர் அமைச் சகம் தயார் நிலையில் வைத்துள்ளது. அரசாங்கம் அனைத்து தொழிலாளர்களையும் சமூக பாதுகாப்புக்குள் கொண்டு வர முயற்சி செய்து வருகிறது. இதன் மூலம் 50 லட்சம் தொழிலாளர்கள் கூடுதலாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் இணைவார்கள். மேலும் இதன் மூலம் பிஎஃப் நிதி 20 லட்சம் கோடி ரூபாயாக உயரும்’’ என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவித்தாவது: இதற்கான சட்டத்திருத்தத்தை நாடாளுமன்றத்தின் மூலமாக இல்லாமல் நிர்வாக ஆணை மூலமாக கொண்டு வர அரசு முயற்சித்து வருகிறது. விரைவில் இது குறித்த மாற்றங்கள் பற்றி மத்திய அரசு தெரிவிக்கும். இரண்டு மாத ஆலோசனைக்குப் பிறகு அறிவிப்பாக வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT