Published : 30 Mar 2016 10:49 AM
Last Updated : 30 Mar 2016 10:49 AM
பொதுத்துறை வங்கிகளில் மத்திய அரசு 5,050 கோடி ரூபாயை விரைவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. முன்னதாக இம்மாத ஆரம்பத்தில் நாடாளு மன்றம் இதற்கான ஒப்புதலை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
சிண்டிகேட் வங்கி, யூகோ வங்கியில் மத்திய அரசு முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த வங்கிகள் மத்திய அரசுக்கு முன்னுரிமை பங்குகள் வழங்கு கின்றன. அதன் அடிப்படையில் மத்திய அரசு முதலீடு செய்கிறது. யூகோ வங்கியில் 935 கோடி ரூபாயும், சிண்டிகேட் வங்கி 740 கோடி ரூபாயும் நிதி திரட்டுகின்றன. இந்த இரண்டு வங்கியிலும் 1,675 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட இருக்கிறது. இந்த இரு வங்கிகளின் இயக்கு நர் குழு மார்ச் 31-ம் தேதி ஒப்புதல் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல பேங்க் ஆப் இந்தியாவில் முதலீடு செய்யவும் மத்திய அரசு ஒப்புதல் தெரி வித்துள்ளது. பேங்க் ஆப் இந்தியா முன்னுரிமை பங்குகள் ஒதுக்கி 1,150 கோடி ரூபாயை திரட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
இந்த இரண்டு வங்கிகளை தவிர, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, ஓரி யண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், விஜயா வங்கி மற்றும் யுனை டெட் பேங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளும் மத்திய அரசின் நிதியை பெறுவதற்கான முயற்சி யில் ஈடுபட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT