Published : 09 Mar 2016 10:28 AM
Last Updated : 09 Mar 2016 10:28 AM

இவரைத் தெரியுமா?- கே.பி.எஸ். ஆனந்த்

ஆசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் கூடுதல் இயக்குநர், நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பு வகிக்கிறார். 2012 ஏப்ரல் முதல் இந்த பொறுப்பில் இருந்து வருகிறார்.

இதற்கு முன் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த பி.எம்.மூர்த்திக்கு பிறகு ஏப்ரல் 2012-ல் பொறுப்புக்கு வந்தார். 2015ல் இயக்குநர் குழு மீண்டும் இவரை தேர்ந்தெடுத்துள்ளது.

நிறுவனத்தின் டெக்கரேட்டிவ் பிசினஸ் பிரிவின் தலைவராகவும் உள்ளார்.

இந்திய பெயிண்ட் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

கொல்கத்தா ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் மேலாண்மை உயர்கல்வி பட்டம் பெற்றவர்.

நிறுவனத்தின் பங்குதாரர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் நல்லுறவு குழு, சமூக பொறுப்புணர்வு குழு மற்றும் ரிஸ்க் மேனேஜ்மெண்ட் குழுவிலும் உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x