Published : 24 Sep 2021 12:17 PM
Last Updated : 24 Sep 2021 12:17 PM

பங்குச்சந்தை புதிய உச்சம்: 60 ஆயிரம் புள்ளிகளை கடந்தது சென்செக்ஸ்

 மும்பை

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் இன்று 60 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய சாதனை படைத்தது.

அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டி விகிதத்தில் விரைவில் மாற்றம் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பத்திரம் வாங்குவதையும் குறைக்கலாம் என்பதால் அமெரிக்க டாலரின் மதிப்பானது மீண்டும் ஏற்றம் கண்டு காணப்படுகின்றது. மேலும் இந்திய பொருளாதாரம் குறித்த கணிப்புகளும் சாதமாக வந்து கொண்டுள்ளன. இதனால் பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டு வருகின்றன. எனினும் சில நாட்களாக இறங்கு முகத்தில் இருந்த நிலையில் இன்று மீண்டும் ஏற்றம் கண்டன.

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1,030 புள்ளிகள் வரை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது. இன்றைய வர்த்தக நேர இறுதியில் பிஎஸ்இ சென்செக்ஸ் 958 புள்ளிகள் உயர்ந்து 59,885 புள்ளிகளில் நிறைவடைந்தது. நிப்டி 276 புள்ளிகள் உயர்ந்து 17,800 புள்ளிகளில் நிறைவடைந்தது.

இந்தநிலையில் இந்த ஏற்றம் இன்றும் தொடர்ந்தது. இன்று காலை பங்கு வர்த்தகம் தொடங்கியது முதலே ஏற்ற நிலை காணப்பட்டது.

காலை 11 மணி நிலவரப்படி 60267 புள்ளிகள் என்ற நிலையில் சென்செக்ஸ் உச்சத்தில் இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 17933 புள்ளிகள் என்ற உச்சத்தை எட்டியது. இந்த உயர்வு இதுவரை இல்லாத புதிய உச்சமாகும்.

இன்போசிஸ் நிறுவன பங்குகள் 2 சதவீத அளவிற்கு உயர்ந்தன. எல் அண்ட் டி, எச்.சி.எல் டெக்னாலஜிஸ், ஏசியன் பெயின்ட்ஸ், டிசிஎஸ், டெக் மகிந்திரா, எச்டிஎப்சி வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் ஏற்றம் பெற்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x