Published : 28 Feb 2016 11:47 AM
Last Updated : 28 Feb 2016 11:47 AM
கொரியாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் மீது அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்த வழங்கில் சாம்சங் நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது.
நேற்று முன் தினம் (வெள்ளிக் கிழமை) அமெரிக்க உச்ச நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு சாம்சங் நிறுவனத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் தொழில்நுட்பங்களை சாம்சங் நிறுவன ஸ்மார்ட்போனில் பயன்படுத்தியதாக ஆப்பிள் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
ஆப்பிள் நிறுவனம் கூறும் காப்புரிமை தொடர்பான புகார் கள் ஆதாரமற்றது என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆப்பிள் நிறுவனத்திற்கு சாம்சங் நிறுவனம் செலுத்த வேண்டிய 11 கோடி டாலரையும் தள்ளுபடி செய்தது.
சாம்சங் நிறுவனம் மீது 2012-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. தாங்கள் காப்புரிமை பெற்ற சில பாகங்களை சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட்போனில் பயன் படுத்துவதாக வழக்கு தொடர்ந் தது. ஆனால் இந்தக் குற்றச் சாட்டை சாம்சங் மறுத்தது.
இந்த வழக்கின்போது 220 கோடி டாலர் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரியது. வழக்கை விசாரித்த கலிபோர் னியா நீதிமன்றம் 11 கோடி டாலர் நஷ்ட ஈட்டை சாம்சங் வழங்க வேண்டும் என தீர்ப் பளித்தது. இதை எதிர்த்து சாம்சங் மேல்முறையீடு செய்தது. இதனிடையே வழக்கு நீண்ட காலமாக நடைபெறு வதால் கடந்த டிசம்பரில் 54 கோடி டாலரை வட்டியுடன் செலுத்தியது. 2014-ம் ஆண் டில் காப்புரிமை தொடர்பாக அமெரிக்கா தவிர்த்து பிறநாடுக ளில் உள்ள வழக்குகளைக் கைவிடுவதென இரு நிறுவனங்களும் முடிவு செய்து 12-க்கும் அதிகமான நாடுகளில் தொடரப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT