Published : 21 Feb 2016 12:00 PM
Last Updated : 21 Feb 2016 12:00 PM
கடந்த பத்தாண்டுகளில் இந்தியர்கள் 26,700 கோடி டாலர் அளவுக்கு தங்கம் வாங்கியுள்ளனர் என்று கோட்டக் ஈக்விட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 18 லட்சம் கோடியாகும்.
வெளிநாட்டிலிருந்து இறக்கு மதி செய்யப்படும் தங்கத்தில் ஓரளவு மறு ஏற்றுமதி செய்யப் படுகிறது. இவ்விதம் மறு ஏற்று மதி செய்யப்படும் தங்கத்தைத் தவிர்த்து ரூ. 18 லட்சம் கோடி தங்கம் உள்நாட்டில் வாங்கப்பட் டுள்ளதாக நிறுவனம் தெரிவித் துள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவுக்கு வந்துள்ள அந்நிய நிறுவன முதலீடுகளின் மதிப்பு 11,900 கோடி டாலர்களாகவும், அந்நிய நேரடி முதலீடுகளின் மதிப்பு 18,500 கோடி டாலர்களாகவும் உள்ளது. இந்த முதலீடுகள் இந்தியாவில் தங்கம் வாங்க பயன்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது. இருந்தாலும் வெளிநாடுகளிலிருந்து இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதிலும் ஆர்வர் காட்டினர் என்றும், அதேசமயத்தில் இந்தியர்கள் தங்கம் வாங்குவதில் மும்முரமாக இருந்தனர் என்றும் கோட்டக் ஈக்விட்டிஸ் நிறுவனத்தின் அகிலேஷ் திலோதியா தெரிவித்தார்.
தங்கத்தின் மீது இந்தியர்களுக்கு உள்ள மோகம் பொருளாதாரத்தை பாதிக்கிறது. 2011-12 ஆண்டில் தங்க இறக்குமதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததால் எதிர்மறையான விளைவுகள் உருவாயின. நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை குறைந்ததால் அந்நிய முதலீடுகள் வருவதில் பாதிப்புகள் ஏற்பட்டன. இந்தியர்கள் தொடர்ந்து தங்கம் வாங்குவதில் காட்டிய ஆர்வத்தால் நடப்புக் கணக்கு பற்றாக்குறையில் பெரும் சரிவு ஏற்படும் என்கிற கவலையும் இருந்தது. மத்திய அரசு படிப்படியாக தங்க இறக்குமதிக்கான வரியை 10 சதவீதமாக உயர்த்தியது. இதனால் இறக்குமதி சற்றே குறைந்தது. ஆனால் இது உள்ளூர் சந்தைகளில் விலை உயர்வுக்கும் காரணமாக இருந்தது என்று கோட்டக் கூறியுள்ளது.
வேர்ல்டு கோல்டு கவுன்சில் புள்ளிவிவரங்கள் படி 2015 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஆபரண தங்கத்துக்கான தேவை 77 சதவீதமாக இருந்தது. மொத்தம் 849 டன் தங்கத்தில் 654 டன் தங்க ஆபரணத்துக்கான தேவையாக இருந்தது. மீதி தங்கம் முதலீட்டுக்கான தங்கக் காசு மற்றும் தங்கக் கட்டிகளாக பயன்பட்டுள்ளன.
தங்க நுகர்வில் சீனாவுக்கு அடுத்து உலகின் இரண்டாவது மிகப்பெரிய சந்தையாக இந்தியா உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT