Published : 08 Jun 2021 11:19 AM
Last Updated : 08 Jun 2021 11:19 AM
பெட்ரோல், டீசலும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்பட வேண்டும், இதுதுகுறித்து ஜிஎஸ்டி கவுன்சில் தான் முடிவெடுக்க வேண்டும் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.
நாடு முழுவதும் கரோனா பரவல் 2-ம் அலை காணப்படுகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொருளாதார நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விற்பனையும் தொடர்ந்து சரிந்து வருகிறது.
இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கரோனா ஊரடங்கால் பெட்ரோலிய பொருட்களின் தேவை குறைந்துள்ளதால் அவற்றின் விலையை, உற்பத்தி செய்யும் நாடுகள் உயர்த்தி வருகின்றன.
இந்தியாவில் இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தற்போது பெட்ரோல், டீசல் விலையை விலையை உயர்த்தி வருகின்றன.
மே மாதம் இரண்டாவது வாரத்தில் பெட்ரால்- டீசல் விலை உச்சம் தொட்டன. பின்னர் சற்று குறைந்தது. இந்தநிலையில் பெட்ரோல்- டீசல் விலை மீண்டும் உச்சம் தொட்டு வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது பற்றி பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான் கருத்து கூறியுள்ளார். அவர் தெரிவித்ததாவது:
சமீபத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70 டாலர்களுக்கு மேல் அதிகரித்துள்ளது. பெட்ரோலிய பொருட்களின் விலை கூடியதற்கு முக்கிய காரணம் இது தான். நாம் நமது எண்ணெய் தேவையில் 80 சதவீதம் வரை இறக்குமதி செய்வதால், சர்வதேச விலை உயர்வு நம்நாட்டில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
பெட்ரோல், டீசலின் விலை சர்வதேச சந்தையால் கட்டுப்படுத்தப்படுகிறது. பெட்ரோல், டீசலும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்பதுதான் எனது கருத்தும். ஆனால் அதுகுறித்து ஜிஎஸ்டி கவுன்சில் தான் முடிவெடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT