Published : 15 May 2021 12:11 PM
Last Updated : 15 May 2021 12:11 PM

அரசு தங்க பத்திரம் திட்டம் 2021-22  வெளியீடு: கிராம் விலை எவ்வளவு?- கடைசி தேதி அறிவிப்பு

மும்பை

அரசு தங்க பத்திரம் திட்டம் 2021-22 (வரிசை I) – வெளியிடப்பட்டுள்ளது.

2021 மே 12 தேதியிட்ட இந்திய அரசின் அறிவிப்பு எண் 4(5)-B(W&M)/2021-ன் படி, 2021 மே 25-ஐ செட்டில்மெண்ட் தேதியாக கொண்ட அரசு தங்க பத்திரங்கள் 2021-22 (வரிசை I) 2021 மே 17 முதல் 21 வரை திறந்திருக்கும்.

சந்தா காலத்திற்கான பத்திரத்தின் வெளியீட்டு விலை ஒரு கிராமுக்கு ரூ 4,777 (ரூபாய் நான்கு ஆயிரத்து எழுநூற்றி எழுபத்தி ஏழு மட்டுமே) ஆக இருக்கும். இந்திய ரிசர்வ் வங்கியின் 2021 மே 14 தேதியிட்ட செய்தி குறிப்பிலும் இது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியுடனான ஆலோசனைக்குப் பிறகு, ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கட்டணத்தையும் டிஜிட்டல் முறையில் செலுத்தும் முதலீட்டாளர்களுக்கு ஒரு கிராமுக்கு ரூபாய் 50 (ரூபாய் ஐம்பது) தள்ளுபடி வழங்க இந்திய அரசு முடிவெடுத்துள்ளது.

அத்தகைய முதலீட்டாளர்களுக்கு தங்கத்தின் வெளியீட்டு விலை, ஒரு கிராமுக்கு ரூ 4,727 (ரூபாய் நான்கு ஆயிரத்து எழுநூற்றி இருபத்தி ஏழு மட்டுமே) ஆக இருக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x