Published : 05 Nov 2015 09:11 AM
Last Updated : 05 Nov 2015 09:11 AM
இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கியதாக வால்மார்ட் நிறுவனம் தனது ஆண்டறிக்கை யில் குறிப்பிட்டிருந்தது. இது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு வால் மார்ட் நிறுவனத்தின் இந்திய பிரிவு அதிகாரிக்கு மத்திய லஞ்ச ஒழிப்புத் துறை (சிவிசி) சம்மன் அனுப்பியுள்ளது.
ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து லஞ்ச ஒழிப்புத்துறை இத்தகைய சம்மனை அனுப்பி விசாரணை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. இதுபோல சிவிசி விசாரணை மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். இது தொடர்பாக சில ஆவணங்களை யும் சிவிசி ஆய்வு செய்துள்ளது.
``நிறுவனத்தின் சில ஆவணங் களை ஆராய்ந்ததில் வால்மார்ட் நிறுவனம் இங்குள்ள அதிகாரி களுக்கு பணம் அளித்திருக்கலாம் எனத் தெரிகிறது. இது குறித்து விசாரிக்க வேண்டியது முக்கிய கடமை என்று சிவிசி ஆணையர் டி.எம். பாசின் தெரிவித்தார்.
இது தொடர்பான விவரங்களை நவம்பர் 15-ம் தேதி அளிக்குமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். தனியார் நிறுவனம் மீது அதிலும் குறிப்பாக வெளிநாட்டைச் சேர்ந்த நிறுவனம் மீது சிவிசி விசாரணை நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
வால் ஸ்டிரீட் செய்தித்தாளில் வால்மார்ட் குறித்த செய்தி வெளி யாகியிருந்தது. அதில் இந்தியாவில் இந்நிறுவனம் சில பொருள்களை இறக்குமதி செய்வதற்கு இந்திய அதிகாரி களுக்கு சிறிய அளவில் லஞ்சம் கொடுத்ததாகவும் அதேபோல ரியல் எஸ்டேட் அனுமதிக்கு லஞ்சம் அளித்ததாகவும் செய்தி வெளியிட்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT