Published : 18 Nov 2015 09:15 AM
Last Updated : 18 Nov 2015 09:15 AM

சர்க்கரை நிறுவனப் பங்குகள் உயர்வு

நேற்றைய வர்த்தகத்தில் சர்க்கரை நிறுவனப் பங்குகள் உயர்ந்து முடிந்தன. சர்க்கரை உற்பத்தி குறைந்ததால் விலை உயரும் என்ற நம்பிக்கை காரணமாக இந்த பங்குகளுக்கு தேவை இருந்தன. சில பங்குகள் 20 சதவீதம் வரை கூட உயர்ந்தன.

ரேணுகா சுகர்ஸ் பங்கு 20 சதவீதம் உயர்ந்து 16.05 ரூபாயில் முடிவடைந்தது. அதேபோல இஐடி பாரி பங்கு 9.33 சதவீதமும், மவானா சுகர்ஸ் பங்கு 9.95 சதவீதமும், சக்தி சுகர்ஸ் 3.41 சதவீதமும் உயர்ந்து முடிந்தன. பண்ணாரி அம்மன் சுகர்ஸ் 5.77 சதவீதமும், உத்தம் சுகர் மில்ஸ் 9.98 சதவீதமும் உயர்ந்தன. பெரும்பாலான சர்க்கரை நிறுவனப் பங்குகள் உயர்ந்து வர்த்தகமானது.

இக்ரா நிறுவனத்தின் அறிக்கைபடி சர்க்கரை உற்பத்தி 4.62 சதவீதம் சரிந்து 2.68 கோடி டன்னாக நடப்பு நிதி ஆண்டில் (அக்டோபர் 2015- செப்டம்பர் 2016) இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்க்கரை விலை உயர்வதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது. கடந்த நிதி ஆண்டில் சர்க்கரை உற்பத்தி 2.81 கோடி டன்னாக இருந்தது.

நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 104 புள்ளிகள் உயர்ந்து 25864 புள்ளியில் முடிவடைந்தது. அதேபோல நிப்டி 30 புள்ளிகள் உயர்ந்து 7837 புள்ளியில் முடிவடைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x