Published : 01 Feb 2021 08:47 AM
Last Updated : 01 Feb 2021 08:47 AM

3,04,625.51 மெட்ரிக் டன் பாசிப் பயறு, உளுந்து, துவரை, நிலக்கடலை, சோயாபீன்ஸ் கொள்முதல் 

காரீப் கொள்முதல்: 87.20 லட்சம் நெல் விவசாயிகளுக்கு, ரூ. 1,12,983.55 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்பட்டுள்ளது.

காரீப் சந்தை பருவத்தில், காரீப் பயிர்களை குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அரசு தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறது.

தமிழகம், பஞ்சாப் உட்பட நெல் உற்பத்தி செய்யப்படும் மாநிலங்களில் நெல் கொள்முதல் சுமூகமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 30ம் தேதி வரை, 598.43 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு இதே காலகட்ட கொள்முதலை விட 18.10 சதவீதம் அதிகம்.

இதற்காக சுமார் 87.20 லட்சம் விவசாயிகள், ரூ. 1,12,983.55 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பெற்றுள்ளனர்.

மாநிலங்களின் வேண்டுகோள்படி, 51.92 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் கொள்முதல் செய்ய, ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 30ம் தேதி வரை, 3,04,625.51 மெட்ரிக் டன் பாசிப் பயறு, உளுந்து, துவரை, நிலக்கடலை, சோயாபீன்ஸ் ஆகியவற்றை அரசு கொள்முதல் செய்துள்ளது. இதற்காக 1,64,589 விவசாயிகள, ரூ.1,637 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலை பெற்றுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x