Published : 05 Jan 2021 07:44 AM
Last Updated : 05 Jan 2021 07:44 AM

தொடர் ஏற்றத்தில் பங்குச் சந்தை சென்செக்ஸ் முதல் முறையாக 48,000 புள்ளிகளைக் கடந்தது

மும்பை

கரோனா பாதிப்பில் இருந்து உலக நாடுகள் மீண்டு வந்து கொண்டிருக்கும் அதே வேளையில், கரோனா தடுப்பு மருந்து குறித்த பாசிட்டிவ் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் நம்பிக்கை அடைந்துள்ள முதலீட்டாளர்கள், பங்குச் சந்தையில் உற்சாகமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக ஆசிய பங்குச் சந்தைகள் ஏற்றத்தில் இருந்து வருகின்றன.

இந்திய பங்குச் சந்தைகளைப் பொறுத்த வரை நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 299.24 ஏற்றம் கண்டு 48,168.22 என்ற நிலையில் வர்த்தகமானது. நிஃப்டி 89.25 புள்ளிகள் ஏற்றம் கண்டு 14,107.75 என்ற நிலையில் வர்த்தகமானது.

வங்கிகள், நிதி சேவைகள், ஆட்டோமொபைல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் என பல துறைகளும் ஏற்றம் கண்டன.

நிஃப்டி 50 பங்குகளில் டாடா மோட்டார்ஸ், கெயில், டாடா ஸ்டீல், ஐஷர் மோட்டார்ஸ் மற்றும் ஓஎன்ஜிசி ஆகியவை 1.82 சதவீதம் முதல் 3.11 சதவீதம் வரை ஏற்றத்தை சந்தித்தன. அதேசமயம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹீரோ மோட்டோகார்ப், ஏசியன்
பெயின்ட்ஸ் ஆகியவை இறக்கம்அடைந்தன. டிசிஎஸ், இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகியவற் றின் ஏற்றம் பங்குச் சந்தையின் ஏற்றத்துக்கு பெரிய அளவில் பங்கு வகித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x