Published : 04 Jan 2021 05:29 PM
Last Updated : 04 Jan 2021 05:29 PM

தங்கம் விலை மாலையில் மீண்டும் உயர்வு

தங்கம் விலை இன்று மாலையில் மீண்டும் உயர்ந்துள்ளது.

தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்தனர்.

பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. கரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன.

இந்தநிலையில் இன்று காலை தங்கம் விலை உயர்ந்தது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.44 உயர்ந்து ரூ.4,792க்கு விற்பனையானது. பவுனுக்கு ரூ.352 உயர்ந்து ரூ.38,336க்கு விற்பனையானது.

மாலை நேர நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.23 உயர்ந்து ரூ.4815க்கு விற்பனையானது. மாலையில் பவுனுக்கு ரூ.184 உயர்ந்து ரூ.38520க்கு விற்பனையானது.

இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் 41592 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராம் 74.10 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x