Published : 01 Jan 2021 08:46 AM
Last Updated : 01 Jan 2021 08:46 AM
மருத்துவ குணங்கள் நிறைந்த முருங்கைத் தூள் ஏற்றுமதியை இந்தியா தொடங்கியது.
முருங்கைப் பொருள்களின் ஏற்றுமதிகளை ஊக்குவிக்கும் விதமாக, தேவையான உள்கட்டமைப்பை தனியார் நிறுவனங்கள் உருவாக்கிக் கொள்வதற்கான ஆதரவை வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருள்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம் வழங்கி வருகிறது.
இரண்டு டன்கள் இயற்கை விவசாய சான்றளிக்கப்பட்ட முருங்கைத் தூள், விமானம் மூலம் 2020 டிசம்பர் 29 அன்று அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டது.
இந்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் கீழ் இயங்கும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருள்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையத்தின் தலைவர் எம். அங்கமுத்து ஏற்றுமதியைத் தொடங்கி வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT