Published : 31 Dec 2020 09:31 AM
Last Updated : 31 Dec 2020 09:31 AM
பங்கேற்பு ஒப்பந்தங்கள் வாயிலாக வங்கி நிறுவனங்கள் சொத்துக்களை பரிமாற்றம் செய்ய ஐஎஃப்எஸ்சிஏ அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வங்கி நிறுவனங்கள் இதர நிதி நிறுவனங்களுக்கு அவற்றிடம் இருந்து, இந்தியாவில் வசிப்போர் மற்றும் இந்தியாவிற்கு வெளியில் வசிப்போருக்கு அவர்களிடம் இருந்து அங்கீகரிக்கப்பட்ட நிலையான நிலையான இடர் பங்கேற்பு ஒப்பந்தத்தின் வாயிலாக சொத்துக்களை பரிமாற்றம் செய்ய சர்வதேச நிதி சேவை மையங்களின் ஆணையம் (ஐஎஃப்எஸ்சிஏ) அனுமதி அளித்துள்ளது.
நிலையான இடர் பங்கேற்பு ஒப்பந்தத்தின் மூலம் சொத்துக்களை பரிமாற்றம் செய்துகொள்வது பல்வேறு துறைகளில் குறிப்பாக நிதி வர்த்தகத் துறையில் கடைப்பிடிக்கப்படும் பொதுவான நடைமுறை. நிலையான இடர் பங்கேற்பு ஒப்பந்தத்தின் கீழ் இரண்டு நிறுவனங்களுக்கு (வாங்குவோர் மற்றும் விற்போர்) இடையே இருதரப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதன் வாயிலாக சர்வதேச நிதி சேவை மையங்களின் ஆணையத்தில் வங்கி நிறுவனங்கள் மூலமாக வெளிநாட்டு சொத்துக்கள் பயன்படுத்தப்படுவது ஊக்குவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT