Published : 31 Dec 2020 08:24 AM
Last Updated : 31 Dec 2020 08:24 AM

சென்னை-பெங்களூர் தொழில் பெருவழிப் பாதை திட்டம்: மத்திய அரசு ஒப்புதல்

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி

சென்னை-பெங்களூர் தொழில் பெருவழிப் பாதை திட்டத்தின் கீழ் கிருஷ்ணாபட்டனம் மற்றும் துமகுருவில் முனையங்கள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

சென்னை-பெங்களூர் தொழில் பெருவழிப் பாதை (சிபிஐசி) திட்டத்தின் கீழ் கிருஷ்ணாபட்டனம் மற்றும் துமகுருவில் தொழில் பாதை முனையம் அமைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கிரேட்டர் நொய்டாவில் பன்முக தளவாட மையம் மற்றும் பன்முக போக்குவரத்து மையம் அமைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த திட்டங்களுக்கு மொத்தமாக ரூபாய் 7,725 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2.8 லட்சத்துக்கும் அதிகமான நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

மேற்கண்ட திட்டங்களை தொழில் ஊக்குவிப்பு மற்றும் உள்நாட்டு வர்த்தக துறை முன்மொழிந்து உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x