Published : 25 Dec 2020 03:15 AM
Last Updated : 25 Dec 2020 03:15 AM

சென்செக்ஸ் 530 புள்ளிகள் ஏற்றம்

பங்குச் சந்தைகள் தொடர்ந்து மூன்றாம் நாளாக நேற்று ஏற்றத்தை சந்தித்தன. சென்செக்ஸ் அதிகபட்சமாக 529 புள்ளிகள் ஏற்றம் கண்டது.

பிரிட்டனில் புதிய வகை கரோனா வைரஸ் பாதிப்பு செய்தி வந்ததை அடுத்து ஐரோப்பிய சந்தைகள் இறக்கம் கண்டன. இதன் எதிரொலியாக இந்திய சந்தைகளிலும் திங்களன்று இறக்கத்தை காண முடிந்தது. ஆனாலும் அடுத்த வர்த்தக நாட்களில் பங்குச் சந்தை மீண்டு ஏற்றத்தை சந்தித்தது. நேற்று தொடர்ந்து மூன்றாவது நாளாக சந்தை ஏற்றத்தில் வர்த்தகமானது.

சென்செக்ஸ் 529 புள்ளிகள் ஏற்றம் கண்டு 46,974 புள்ளிகள் என்ற நிலையில் வர்த்தகமானது. நிஃப்டி 148 புள்ளிகள் ஏற்றம் கண்டு 13,749 புள்ளிகள் என்ற நிலையில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

சென்செக்ஸ் பங்குகளில் ஆக்சிஸ் வங்கி, சன் பார்மா, ஓஎன்ஜிசி, ரிலையன்ஸ், ஹெச்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை 2.94 சதவீதம் வரை ஏற்றம் கண்டன. அதேசமயம் இன்போசிஸ், நெஸ்லே இந்தியா, இன்டஸ்இந்த் வங்கி, டெக் மஹிந்திரா, டாக்டர் ரெட்டிஸ் ஆகியவை1.32 சதவீதம் வரை இறக்கத்தைசந்தித்தன. நிஃப்டி தளத்தின் உப குறியீடுகளான நிஃப்டி பைனான்சியல் சர்வீசஸ், நிஃப்டி வங்கி, தனியார் வங்கி ஆகியவை 1.81 சதவீதம் ஏற்றம் கண்டன.

புதிய வைரஸ் பாதிப்பு குறித்தபதற்றம் குறையத் தொடங்கியுள்ளது. மேலும் ஐரோப்பிய நாடுகள் சில இங்கிலாந்துடனான விமான வழித் தடங்களையும் திறக்க உள்ளன. இதனால் பங்குச்சந்தைகளில் பாசிட்டிவான போக்கு தொடரும் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x