Published : 21 Dec 2020 01:49 PM
Last Updated : 21 Dec 2020 01:49 PM

ரூ.16,865.81 கோடிக்கு பருத்திக் கொள்முதல்

நடப்பு கரீப் பருவக் கொள்முதலில், 11,24,252 விவசாயிகளிடமிருந்து ரூ. 16,865.81 கோடிக்கு பருத்தி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

நடப்பு கரீப் பருவத்தில், கரீப் பயிர்களை குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அரசு தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறது. நெல் விளைவிக்கப்படும் மாநிலங்களில் இருந்து கடந்த 19ஆம் தேதி வரை 412.91 இலட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே கால அளவை விட 22.25 சதவீதம் அதிகம். இதன் மூலம் 48.56 இலட்சம் விவசாயிகள் ரூ.77, 957.83 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலை பெற்றுள்ளனர்.

மாநிலங்கள் தெரிவித்த விருப்பத்தின் அடிப்படையில், 51 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு கொள்முதல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது. தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 1.23 இலட்சம் மெட்ரிக் டன் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

கடந்த 19ஆம் தேதி வரை 1,95,899.38 மெட்ரிக் டன் பாசிப்பயறு, உளுந்து, நிலக்கடலை, சோயாபீன்ஸ் ஆகியவற்றை ரூ.1050.08 கோடிக்கு அரசு கொள்முதல் செய்துள்ளது.

பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், தெலங்கானா, ஆந்திரா, ஒடிசா மற்றும் கர்நாடகாவிலிருந்து பருத்தி விதை தொடர்ந்து கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த 19ஆம் தேதி வரை, 57,83,122 பருத்திக் கட்டுகள், 11,24,252 விவசாயிகளிடமிருந்து ரூ.16,865.81 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x