Last Updated : 31 Oct, 2015 04:18 PM

 

Published : 31 Oct 2015 04:18 PM
Last Updated : 31 Oct 2015 04:18 PM

ரியல் எஸ்டேட் துறையினருக்கு அருண் ஜேட்லி நம்பிக்கை

ரியல் எஸ்டேட் வர்த்தகத்துக்கான சாதகமான சூழ்நிலை விரைவில் ஏற்படும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை அளித்துள்ளார்.

சந்தைப் பொருளாதார நிலைமைகளிலேயே ரியல் எஸ்டேட் துறை நீடித்து நிலைக்க முடியும், மானியங்கள் தேவையில்லை என்றும் தெரிவித்தார் அருண் ஜேட்லி.

மேலும் இத்துறையினர் வரிவிதிப்பு குறித்த இத்துறையினரின் ஆலோசனைகளையும் அருண் ஜேட்லி கோரியுள்ளார்.

மும்பையில் ரியல் எஸ்டேட் துறையினர் பங்கேற்ற சந்திப்பில் அருண் ஜேட்லி இதனை தெரிவித்தார்.

“ரியல் எஸ்டேட் துறை சந்தை நிலைமைகளிலேயே மீண்டும் நிலைப்பெற்று விடும், மானியங்கள் அதன் இருப்பின் சாரம்சம் அல்ல.

மத்திய ரிசர்வ் வங்கி நடப்பு ஆண்டில் 4 முறை வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இது இந்தத்துறையினருக்கு பயனளிக்கும். இத்தகைய வட்டிக் குறைப்பு நடவடிக்கைகள் நீடிக்கும்.

ரியல்டி துறையின் மந்த நிலை தற்போது முடிவுக்கு வர வேண்டும்.

நாம் வேகமாக வளர்ச்சியடையும் மிகப்பெரிய பொருளாதாரமாக இல்லாவிட்டாலும், கேள்விக்கிடமின்றி வேகவளர்ச்சியில் ஒரு நாடாக விளங்குகிறோம். வருவாய் வசூலில் நம்பிக்கையூட்டும் சூழ்நிலை நிலவுகிறது.

சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்குப் பிறகு மின்சாரத்துறையை எங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம்.

இவ்வாறு கூறினார் அருண் ஜேட்லி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x