Published : 16 Dec 2020 08:21 AM
Last Updated : 16 Dec 2020 08:21 AM
சென்னையைச் சேர்ந்த தபால் ஊழியர்களுக்கும் இந்த ஆண்டு தபால் துறையின் மேக்தூத் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
தபால் ஊழியர்கள் 2019-20,-ஆம் ஆண்டில் செய்த சிறப்பான சேவைகளுக்காக மேக்தூத் விருதுகளை அவர்களுக்கு இன்று வழங்கி தபால் துறை கௌரவித்தது.
சென்னை மண்டலத்தின் சந்தைப்படுத்துதல் பிரிவில் ஒருங்கிணைப்பாளராக பணிபுரியும் எம் டி சீனிவாசன் மேக்தூத் விருதுகளை இன்று பெற்றவர்களில் ஒருவர் ஆவார்.
சென்னையில் உள்ள தபால் தொழில்நுட்பத்துக்கான திறன்மிகு மையத்தின் துணை இயக்குநரான வி எம் சக்திவேலும் இந்த விருதை பெற்றார்.
மத்திய தகவல் தொடர்பு, சட்டம் மற்றும் நீதி, மின்னணு மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT