Published : 10 Dec 2020 11:28 AM
Last Updated : 10 Dec 2020 11:28 AM
கிராம தொழில்துறையின் வருவாய் இரண்டே ஆண்டுகளில் ரூ .5 லட்சம் கோடியாக உயரும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (சிஐஐ) உலகளாவிய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுககான (எம்எஸ்எம்இ) வர்த்தக உச்சி மாநாடு காணொலி வாயிலாக நடைபெற்றது.
இதில் மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டு பேசினார். அவர் கூறியதாவது:
ஆத்ம நிர்பார் போன்ற திட்டங்களை உருவாக்குவதற்கான முக்கிய காரணம் இந்திய பொருளாதாரத்தை வலுவாக மாற்றுவதே ஆகும், அந்தவகையில் நாம் அதிக அளவில் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும், அதே நேரத்தில் நாம் மெல்ல மெல்ல இறக்குமதியை குறைத்துக்கொள்ள வேண்டும்.
பொருளாதார வளர்ச்சிக்கு சிறுகுறு நடுத்தர தொழில்துறையின் பங்களிப்பை 30 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்த வேண்டும். மேலும் சிறுகுறு நடுத்தர தொழில் ஏற்றுமதியை 48 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக உயர்த்தவும் நமது இலக்கு. சிறுகுறு நடுத்தர தொழில் துறைகளில் இருந்து மேலும் 5 கோடி வேலைகளை உருவாக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் அடுத்த இரண்டே ஆண்டுகளில கிராம தொழில்துறையின் வருவாய் ரூ .80,000 கோடியிலிருந்து ரூ 5 லட்சம் கோடியாக உயரும் என்பதற்கு நான் உறுதியளிக்கிறேன்.
தற்போது, எம்எஸ்எம்இ துறையில் 11 கோடி பேர் பணியாற்றி வருகின்றனர். அடுத்த 5 ஆண்டுகளில் 5 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே மத்திய அரசின் இலக்கு.
இவ்வாறு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT