2021 இறுதிக்குள் ஜியோ 5ஜி சேவை தொழிலதிபர் முகேஷ் அம்பானி தகவல்

2021 இறுதிக்குள் ஜியோ 5ஜி சேவை தொழிலதிபர் முகேஷ் அம்பானி தகவல்

Published on

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், ஜியோ நிறுவனத்தை தொடங்கி 4 ஆண்டுகளாகின்றன. மிகக்குறுகிய காலத்திலேயே தொலைத்தொடர்புத் துறையில் அதிக பங்கு வகிக்கும் நிறுவனமாக ஜியோ உருவெடுத்தது. தற்போது பிற நிறுவனங்களை காட்டிலும் முன்னதாக 5ஜி அதிவேக அலைக்கற்றை சேவையை வழங்க உள்ளது.

இதுகுறித்து அதன் தலைவர் முகேஷ் அம்பானி கூறுகையில், ‘‘குறைந்த விலையில் எல்லோருக்கும் அதிவேக தொலைத்தொடர்பு சேவை வழங்குவதற்காக ஜியோ நிறுவனம் 5ஜி சேவையை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கு தேவையான கொள்கை நடவடிக்கைகள் துரித படுத்தப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஜியோ 5ஜி சேவை சந்தையில் அறிமுகப்படுத்தப்படும்’’ என்று கூறினார்.

மேலும் 5ஜி சேவைக்கான ஹார்டுவேர், சாப்ட்வேர் அனைத்தும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்வதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறோம். இறக்குமதியை குறைத்து சுயசார்பு தன்மையுடன் செயல்படுவதற்கு இது முக்கிய வாய்ப்பாக இருக்கும் என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in