Published : 14 Oct 2015 10:27 AM
Last Updated : 14 Oct 2015 10:27 AM
டாடா குழும நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ் (டிசிஎஸ்) நிறுவனம் செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் ரூ. 6,055 கோடி லாபம் ஈட்டியுள்ளது. நிறுவனத்தின் வருமானம் ரூ. 27,165 கோடியாகும்.
முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ. 5,709 கோடியாக இருந்தது. இப்போது லாபம் 6.1 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதேபோல முந்தைய ஆண்டு இதேகாலத்தில் நிறுவனத்தின் வருமானம் ரூ. 25,668 கோடியாக இருந்தது. தற்போது வருமானம் 5.8 சதவீதம் அதிகரித்துள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் 75 ஆயிரம் புதிய பணியாளர்களைச் சேர்க்க நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. முந்தைய இலக்கு 50 ஆயிரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு பங்குக்கு ரூ. 5.50 இடைக்கால டிவிடெண்ட் அளிப்பதாக அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT