Published : 26 Nov 2020 07:55 AM
Last Updated : 26 Nov 2020 07:55 AM

ஜிஎஸ்டி பற்றாக்குறையை சமாளிக்க விருப்பத் தேர்வு-1: கேரளா, மேற்கு வங்கம் முடிவு

ஜிஎஸ்டி பற்றாக்குறையை சமாளிப்பதற்காக விருப்பத் தேர்வு-1-ஐ கேரளா, மேற்கு வங்கம் தேர்ந்தெடுத்துள்ளன.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) செயல்படுத்தப்பட்டதால் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை சமாளிப்பதற்காக மத்திய நிதி அமைச்சகம் வழங்கிய இரு விருப்பத் தேர்வுகளில் விருப்பத் தேர்வு-1-ஐ தேர்ந்தெடுத்திருப்பதாக கேரளா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் தெரிவித்துள்ளன.

இதன் மூலம், விருப்பத் தேர்வு-1-ஐ தேர்ந்தெடுத்துள்ள மாநிலங்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. சட்டப்பேரவையுடன் கூடிய மூன்று யூனியன் பிரதேசங்களும் (டெல்லி, ஜம்மு & காஷ்மீர் மற்றும் புதுச்சேரி) விருப்பத் தேர்வு-1-ஐ தேர்ந்தெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விருப்பத் தேர்வு-1-ஐ தேர்ந்தெடுத்துள்ளதால், ஜிஎஸ்டியால் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை சமாளிப்பதற்காக சிறப்பு சாளரம் மூலம் இம்மாநிலங்களுக்கு கடன் கிடைக்கும்.

ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள இந்த சாளரத்தின் மூலம் இம்மாநிலங்களின் சார்பாக இந்திய அரசு ரூ 24,000 கோடியை கடனாக வாங்கி, அதை நான்கு தவணைகளில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x