Published : 15 Nov 2020 07:32 PM
Last Updated : 15 Nov 2020 07:32 PM

பாசி பயறு, உளுந்து, நிலக்கடலை மற்றும் சோயாபீன்  58,602.68 மெட்ரிக் டன் கொள்முதல்

கடந்த 14-ம் தேதி வரை, 58,602.68 மெட்ரிக் டன் பாசி பயறு, உளுந்து, நிலக்கடலை மற்றும் சோயாபீன் ஆகியவற்றை மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது.

இந்தாண்டு காரீப் பருவத்தில், தமிழகம், பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், தெலங்கானா, உத்தரகாண்ட், சண்டிகர், ஜம்மு காஷ்மீர், கேரளா, குஜராத் மற்றும் ஆந்திரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நெல் கொள்முதல் சுமூகமாக நடக்கிறது. கடந்த 14ம் தேதி வரை 279.56 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு இதே கால காரீப் பருவ நெல் கொள்முதலைவிட 21.27% அதிகம்.

இதற்காக 24.02 லட்சம் விவசாயிகளுக்கு, ஏற்கனவே ரூ.52,781.42 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மாநிலங்களின் வேண்டுகோள் அடிப்படையில் 45.10 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள், ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஆந்திர பிரதேசம், கர்நாடகா, தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து 1.23 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 14ம் தேதி வரை, 58,602.68 மெட்ரிக் டன் பாசி பயறு, உளுந்து, நிலக்கடலை மற்றும் சோயாபீன் ஆகியவற்றை அரசு கொள்முதல் செய்துள்ளது. இது கடந்தாண்டு இதே காலத்தில் கொள்முதல் செய்யபட்டதைவிட 72.48% அதிகம். இதற்காக தமிழகம், மகாராஷ்டிரா, குஜராத், ஹரியாணா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த 33,959 விவசாயிகள் ரூ.315.63 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலை பெற்றுள்ளனர்.

இதேபோல் கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டில் கடந்த 14ம் தேதி வரை 3961 விவசாயிகளிடமிருந்து 5089 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் ரூ.52.40 கோடி மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, ஆந்திர பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் கடந்த 14ம் தேதி வரை 2,86,547 விவசாயிகளிடமிருந்து 14,65,847 பருத்தி மூடைகள் ரூ.4,187.05 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x