Published : 21 Oct 2020 01:21 PM
Last Updated : 21 Oct 2020 01:21 PM

இபிஎப்ஓ சந்தாதாரர் எண்ணிக்கை 20 லட்சம் அதிகரிப்பு

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு 2020 அக்டோபர் 20 அன்று வெளியிட்டுள்ள தகவல்களின் படி நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் சந்தாதாரர் எண்ணிக்கை சுமார் 20 லட்சம் அதிகரித்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 10.06 லட்சம் நிகர சந்தாதாரர்கள் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் இணைந்தனர் என்று இபிஎப்ஓ என்று அழைக்கப்படும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கோவிட்-19-இன் பாதிப்புக்கு இடையிலும், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் அதிகளவில் சந்தாதாரர்கள் இணைந்துள்ளது, பெருந்தொற்றின் தாக்கத்தில் இருந்து மெதுவாக விடுபட்டு கொவிட்டுக்கு முந்தைய காலகட்டத்தை நோக்கி நிலைமை முன்னேறி வருவதை காட்டுகிறது.

மாநிலங்களை பொருத்தவரை, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், கர்நாடகா மற்றும் ஹரியாணா ஆகியவற்றில் சேர்க்கை விகிதம் அதிகமாக உள்ளதாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2020-ஆம் ஆண்டின் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் இணைந்துள்ள மொத்த உறுப்பினர்களில் 57 சதவீதம் மேற்கண்ட மாநிலங்களில் உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x