Published : 16 Oct 2020 10:56 AM
Last Updated : 16 Oct 2020 10:56 AM
ஜிஎஸ்டி இழப்பீடாக மாநிலங்களுக்குக் கொடுக்க வேண்டிய தொகையை மாநிலங்களே சந்தை மூலம் கடனாகத் திரட்டிக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாடிலிருந்து மாறிய மத்திய அரசு மாநிலங்களுக்காக ரூ.1.1 லட்சம் கோடியை கடனாக வாங்க முடிவெடுத்துள்ளது.
இப்போது மத்திய அரசே மாநிலங்களுக்காக பகுதி பகுதியாக கடன் வாங்கி மாநிலங்களுக்கு கடனாக அளிக்கவிருக்கிறது.
இந்த முடிவு மூலம் ஜிஎஸ்டி வருவாய் இழப்பீடு விவகாரத்தில் மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுக்கும் உள்ள முரண்பாடுகள் இப்போதைக்கு முடிவுக்கு வருகின்றன.
அக்டோபர் 14ம் தேதியன்று டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்கள் தாங்களே கடன் வாங்கிக்கொள்ளும் மத்திய அரசின் அறிவுறுத்தலை ஏற்றுக் கொண்டன. அதாவது கடன் தொகை மற்றும் வட்டியை செலுத்துவது என்பது எதிர்கால செஸ் வரிவசூலிலிருந்து மேற்கொள்ளவும் முடிவெடுக்கப்பட்டது. ஆனால் கேரளா, மேற்கு வங்கம், ஆகிய மாநிலங்ள் மத்திய அரசுதான் கடன் வாங்க வேண்டும் என்று வலியுறுத்தின. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தையும் அணுக முடிவெத்து விட்டன.
இந்நிலையில் மத்திய அரசே கடன் வாங்கி மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடுக்கான தொகையை வழங்கும் முடிவை எடுத்ததை பொருளாதார நிபுணர்கள் பாராட்டியுள்ளனர், இதுதான் சிறந்த வழி, இப்படித்தான் கரோனா பெருந்தொற்று நிலவரங்களை எதிர்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மத்திய அரசின் முடிவைப் பாராட்டி, “ரூ.1.1 லட்சம் கோடி மத்திய அரசே கடனாக வாங்கி மாநில அரசுகளுக்கு அடுத்தடுத்து கடனாக வழங்குவது நல்ல முடிவு. நிலைப்பாட்டை மாற்றியதை வரவேற்கிறேன்” என்று கூறியுள்ளார்.
இந்தக் கடன் வாங்குதல் தனிப்பட்ட சாளரத்தின் வழியாக மேற்கொள்ளப்படுவதால் இது மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறையை பாதிக்காது. அல்லது அரசுக் கடனையும் விஸ்தரிக்காது. மேலும் மாநிலங்கள் கடன் வாங்கும் போது ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு வட்டியைக் கொடுக்க வேண்டியிருப்பதன் தேவையையும் மத்திய அரசின் இந்த முடிவு முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது என்று பொருளாதார நிபுணர்களும் எதிர்க்கட்சிகளும் பாராட்டியுள்ளனர்.
-சிறப்பு நிருபர், தி இந்து ஆங்கிலம்
தமிழில் சுருக்கமாக: இரா.முத்துக்குமார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT