Published : 16 Oct 2020 08:20 AM
Last Updated : 16 Oct 2020 08:20 AM

பங்குச் சந்தையில் ஒரே நாளில் சென்செக்ஸ் 1,097 புள்ளி சரிவு

மும்பை

மும்பை பங்குச் சந்தையில் நேற்று ஒரே நாளில் சென்செக்ஸ் 1,097 புள்ளிகள் சரிந்தன.

பங்குச் சந்தையில் நேற்று கடுமையான சரிவு காணப்பட்டது. பெருமளவிலான பங்குகள் விற்பனை செய்யப்பட்டதால் வர்த்தக முடிவில் 1,097 புள்ளிகள்வரை சரிந்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்ஃபோசிஸ், டிசிஎஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவன பங்குகள் விலை கடுமையாக சரிந்ததே பெரும் சரிவுக்கு முக்கியக் காரணமாகும்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட நிறுவன பங்குகள் விலை குறைந்ததால் 500 புள்ளிகள் வரை சரிய காரணமாக அமைந்தன. கடந்த 3 வாரங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான ஏற்ற, இறக்க சூழல் நேற்றுபங்குச் சந்தையில் காணப்பட்டது. ஐரோப்பிய நாடுகளில் புதிதாக கரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததை தொடர்ந்துஅங்குள்ள பங்குச் சந்தைகள்கடுமையான சரிவை எதிர்கொண்டன. இதன் விளைவாக இந்திய பங்குச் சந்தைகளிலும் சரிவு காணப்பட்டது.

மும்பை பங்குச் சந்தையில் 1,097 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 39,696 ஆகக் குறைந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் 304 புள்ளிகள் சரிந்ததில் 11,666 ஆனது.

ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ், டெக் மஹிந்திரா, பார்தி ஏர்டெல், பஜாஜ் பைனான்ஸ், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் 2.60 சதவீதம் முதல் 3.76 சதவீதம் வரை சரிந்தன. அதேசமயம் டாடா ஸ்டீல், ஹீரோ மோட்டோகார்ப், ஹிண்டால்கோ, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் 1.15 சதவீதம் முதல் 2.52 சதவீதம் வரை உயர்ந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x