Published : 07 Oct 2020 01:17 PM
Last Updated : 07 Oct 2020 01:17 PM
அரசு பங்கு பத்திரங்கள் அக்டோபர் 9ஆம் தேதி மும்பை ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு பங்கு பத்திர விற்பனை குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்த செய்தி குறிப்பு:
ரூபாய் 3000 கோடி அளவிலான 5.09 சதவீதம் மத்திய அரசாங்க பங்கு 2022, 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 5.77 சதவீதம் பங்கு பத்திரம் 2030, ரூபாய் 3000 கோடி மதிப்பிலான அரசாங்க மாறும் சதவீத பத்திரங்கள் 2033, 9,000 கோடி ரூபாய் மதிப்பிலான 6.80 அரசு பத்திரம் 2060 ஆகியவை அக்டோபர் 9- ம் தேதி மும்பை ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் ஏலம் விடப்படும்.
அதற்கான விண்ணப்பங்கள் அன்று மதியம் 12 இல் இருந்து ஒரு மணிக்குள் மின்னஞ்சல் வாயிலாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். அன்றே விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT