Published : 10 Sep 2015 09:25 AM
Last Updated : 10 Sep 2015 09:25 AM

ரூ.6,600 கோடி ஹெச்சிஎல் முதலீடு

அடுத்த ஐந்தாண்டுகளில் தென் தமிழகத்தில் 6,600 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக ஹெச்சிஎல் நிறுவனம் அறிவித்திருக்கிறது. நேற்று சென்னையில் நடந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய அந்த நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார் இதனை தெரிவித்தார். மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் நிறுவனத்தின் முக்கிய மையங்கள் அமைக்கப்படும் என்றார்.

ஏற்கெனவே சென்னை மற்றும் கோவை நகரங்களில் 6,000 கோடி ரூபாய் அளவுக்கு ஹெச்சிஎல் முதலீடு செய்திருக்கிறது. முதல் தலைமுறை தொழில்முனைவோராக 40 வருடங்களுக்கு முன்பு தொழில் தொடங்கினேன். அப்போது தமிழ்நாட்டில் மட்டுமே செயல்பட்டோம், இப்போது தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் செயல்பட்டு வருகிறோம். எங்கள் நிறுவனத்தில் சர்வதேச அளவில் 1.10 லட்சம் நபர்கள் பணிபுரிகிறார்கள். இந்தியாவில் மட்டும் 75,000 நபர்கள் பணிபுரிகிறார்கள். இதில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டும் 35,000 நபர்கள் என்று ஷிவ் நாடார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x