Published : 28 Sep 2020 09:35 PM
Last Updated : 28 Sep 2020 09:35 PM
மீதமுள்ள அனைத்து மாநிலங்களிலும் நெல், அரிசி முன்னதாகவே இன்று முதல் கொள்முதல் தொடங்கியுள்ளது.
கொள்முதல் செய்யும், மீதமிருக்கும் அனைத்து மாநிலங்களிலும் நெல், அரிசி ஆகியவற்றை முன்னதாகவே கொள்முதல் செய்ய உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் தற்போது அனுமதி அளித்துள்ளது.
2020 செப்டம்பர் 28 முதல் கரீப் கொள்முதல் பருவம் 2020-21-இல் தங்களது கொள்முதல் நடவடிக்கைகளைத் தொடங்க, தொடர மாநிலங்களுக்கு உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் தற்போது அனுமதி அளித்துள்ளது.
ஆனால், கேரளா (2020 செப்டம்பர் 21) மற்றும் பஞ்சாப் மற்றும் ஹரியாணா (2020 செப்டம்பர் 26) ஆகிய மாநிலங்களின் கொள்முதல் காலத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் விவசாயிகள் தங்கள் பொருள்களைக் குறைந்தபட்ச ஆதரவு விலையில் விரைவாக விற்பது உறுதி செய்யப்படும். கரீப் சந்தைப்படுத்துதல் பருவம் 2020-21-க்காக மத்தியத் தொகுப்புக் கொள்முதலுக்காக ஒரே மாதிரியான தர நிலைகளை உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT