Published : 28 Sep 2020 07:04 PM
Last Updated : 28 Sep 2020 07:04 PM

தற்சார்பு இந்தியா; பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல்: செயல்முறை வெளியீடு

பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் செயல்முறை-2020-ஐ பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.

பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் செயல்முறை-2020-ஐ பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று வெளியிட்டார். 2002-ஆம் ஆண்டு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் செயல்முறை, உள்நாட்டு தொழில்களுக்கு ஊக்கம் அளிக்கவும், பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் தற்சார்பை எட்டவும் அவ்வப்போது திருத்தப்பட்டு வருகிறது.

பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் செயல்முறை-2020-ஐ வடிவமைப்பதற்காக முதன்மை ஆய்வுக் குழு ஒன்றை தலைமை இயக்குநர் (கொள்முதல்) அபூர்வ சந்திரா தலைமையில் ஆகஸ்ட் 2019-இல் பாதுகாப்பு அமைச்சகம் அமைத்தது.

2020 அக்டோபர் 1 முதல் பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் செயல்முறை-2020 அமலுக்கு வரும். பல்வேறு பங்குதாரர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை கருத்தில் கொண்டு பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் செயல்முறை-20200-ஐ உருவாக்கும் பணிகள் ஒரு வருடத்துக்கும் மேல் நடைபெற்றன.

அரசின் தற்சார்பு இந்தியா லட்சியத்தை சார்ந்து உருவாக்கப்பட்ட பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் செயல்முறை-2020, மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் உள்நாட்டு தொழில்களுக்கு அதிகாரம் அளிப்பதையும், இந்தியாவை சர்வதேச உற்பத்தி மையமாக உருவாக்குவதையும் நோக்கங்களாக கொண்டுள்ளது.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x