Published : 26 Sep 2020 06:50 AM
Last Updated : 26 Sep 2020 06:50 AM

பங்குச் சந்தை மீண்டும் எழுச்சி: ஒரே நாளில் 835 புள்ளி உயர்வு

தொடர்ந்து 6 நா்ட்களாக சரிவைச் சந்தித்து வந்த மும்பை பங்குச் சந்தை வாரத்தின் கடைசி நாளான நேற்று எழுச்சி பெற்றது. ஒரே நாளில் 835 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 37,389 புள்ளிகளானது.

பஜாஜ் பின்சர்வ், ஹெச்சிஎல் டெக், பார்தி ஏர்டெல், இண்டஸ் இந்த் வங்கி, லார்சன் அண்ட் டூப்ரோ, டிசிஎஸ், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட நிறுவன பங்குகள் 6.64 சதவீதம் உயர்ந்தன. முக்கிய 30 நிறுவன பங்குகள் அனைத்தும் ஏற்றம் பெற்றன. தேசிய பங்குச் சந்தையில் தகவல் தொழில்நுட்பம், ஊடகம் மற்றும் பொதுத்துறை வங்கி பங்குகள் 3.46 சதவீதம் வரை உயர்ந்தன.

டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு 28 காசுகள் உயர்ந்து ரூ.73.61 என்ற நிலையை எட்டியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x