Published : 19 Sep 2020 05:24 PM
Last Updated : 19 Sep 2020 05:24 PM

பெட்ரோலிய நிறுவனங்களால் 188.6 கோடி லிட்டர் எத்தனால் கொள்முதல்: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி

எத்தனால் கலந்த பெட்ரோலுக்காக எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்களால் 2018-19-இல் 188.6 கோடி லிட்டர் எத்தனால் கொள்முதல் செய்யப்பட்டது.

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுத்துப்பூர்வமான பதில் ஒன்றின் மூலம் மக்களவையில் அளித்தார். அவர் கூறியதாவது:

எத்தனால் கலந்த பெட்ரோலுக்காக எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்களால் கடந்த மூன்று வருடங்களில் கொள்முதல் செய்யப்பட்ட எத்தனாலின் அளவு பின்வருமாறு:

2016-17-இல் 66.5 கோடி லிட்டர் எத்தனால் வாங்கப்பட்ட நிலையில், 2017-18-இல் 150.5 கோடி லிட்டர் எத்தனாலும், 2018-19-இல் 188.6 கோடி லிட்டர் எத்தனாலும் கொள்முதல் செய்யப்பட்டது.

தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2018-இன் படி, 2030-க்குள் பெட்ரோலில் 20% எத்தனாலை கலக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x