Published : 14 Sep 2020 03:34 PM
Last Updated : 14 Sep 2020 03:34 PM

சிறு, குறு நிறுவனங்களுக்கு விரைவில் நிலுவைத் தொகை: மத்திய அரசு உறுதி

சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வர வேண்டிய நிலுவைத் தொகைகள் விரைவில் கிடைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பல்வேறு துறைகளில் இருந்து சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வர வேண்டிய நிலுவைத் தொகைகள் விரைவில் கிடைப்பதை உறுதி செய்ய, சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம் தற்போது இன்னும் அதிக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைகளை முன்னுரிமை அடிப்படையில் விரைவில் வழங்குமாறு தனியார் நிறுவனங்களை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

நாட்டில் உள்ள 500 பெருநிறுவனக் குழுமங்களுடன் இந்த விஷயத்தை அமைச்சகம் நேரடியாக எடுத்து சென்றுள்ளது. இந்த 500 நிறுவனங்களின் முதலாளிகள், தலைவர்கள், நிர்வாக இயக்குநர்கள் மற்றும் தலைமை அதிகாரிகள் ஆகியோருக்கும் இது தொடர்பாக மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன.

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பெருநிறுவனங்களோடு தொழில் செய்வதாகவும், ஆனால் நிலுவைத் தொகைகளைப் பெறுவதில் தாமதம் ஏற்படுவதாகவும் தெரியவந்ததை

அடுத்து இந்த நடவடிக்கையை சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம் எடுத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x