Published : 11 Sep 2020 04:49 PM
Last Updated : 11 Sep 2020 04:49 PM

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்க பயன்படும் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம்: சந்தோஷ் கங்குவார் பேச்சு

கோவிட்-19 பெருந்தொற்றால் ஏற்படும் பொது பிரச்சினைகளை தீர்க்க தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என ஜி-20 கூட்டத்தில் மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்குவார் பேசினார்.

கோவிட்-19 பெருந்தொற்றால் ஏற்படும் பொது பிரச்சினைகளை களைய நாம் தொடர்ந்து இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஜி-20 உறுப்பு நாடுகளுக்கு தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்பு இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு சந்தோஷ் கங்க்வார் அறைகூவல் விடுத்தார்.

ஜி-20 தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்கள் மெய்நிகர் மாநாட்டில் நேற்று மாலை காணொலி காட்சி மூலம் பேசிய கங்க்வார் இவ்வாறு கூறினார்.

கோவிட்-19 புதிய செயல்பாடுகளுக்கு வழிவகுத்துள்ளதாகவும், நாம் பணியாற்றும் முறையை மாற்றியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். பெருந்தொற்றால் பாதிப்படைந்த தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக, அவர்களின் ஊதியங்களை முறையாக வழங்குமாறு நிறுவனங்களை இந்திய அரசு ஊக்குவித்ததாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், தற்காலிக தங்குமிடங்கள், உணவு மற்றும் மருத்துவ வசதிகள் ஆகியவை தொழிலாளர்களுக்கு செய்யப்பட்டதாகவும், இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்குவதற்காக 'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை' திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x