Published : 05 Sep 2020 07:17 AM
Last Updated : 05 Sep 2020 07:17 AM

பங்குச் சந்தை ஒரே நாளில் 634 புள்ளி வீழ்ச்சி

வாரத்தின் இறுதி நாளான நேற்று மும்பை பங்குச் சந்தையில் 634 புள்ளிகள் சரிந்ததைத் தொடர்ந்து குறியீட்டெண் 38,357 புள்ளிகளாககுறைந்தது. தேசிய பங்குச் சந்தை வெகுவாக சரிந்ததில் குறியீட்டெண் 11,350 ஆனது.

ஆக்சிஸ் வங்கி, டாடா ஸ்டீல், என்டிபிசி, பார்தி ஏர்டெல், எஸ்பிஐ, சன் பார்மா உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன. முக்கியமான 30 பங்குகளில் 28 முன்னணி நிறுவன பங்குகள் சரிவைச் சந்தித்தன. மாருதி சுஸுகி, டிசிஎஸ் மட்டுமே சரிவில் இருந்து தப்பி 1.96 சதவீத அளவுக்கு உயர்ந்தன.

தேசிய பங்குச் சந்தையில் பொதுத்துறை வங்கி, உலோகம், நிதி சேவை துறைகளின் பங்குகள் 2.83 சதவீத அளவுக்குச் சரிந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x